- திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.
- காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.
- நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.
- அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். ( 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்).
- எப்போதும் வெதுவெதுப்பான நீரைப் பருகுதல் நல்லது.
- மேலும், காலை வேளையில் வெறும் வயிற்றுடன் உள்ள போது சிறிது நேரம் ஸ்கிப்பிங் எனப்படும் கயிறு தாண்டும் உடற்பயிற்சி செய்தல் மிகவும் நல்லது.
- வீட்டு வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து வருவது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும்,
சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக உள்ள இந்த உணவுகளை
தவிர்ப்பதோ அல்லது குறைந்தளவில் உட்கொள்ளுவதோ நல்லது
- பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
- மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
- புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
- சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.
- பால், பால் சார்ந்த உணவுகள், பயறு வகைகள், கொழுப்பு நிறைந்த வறுத்த உணவுகள், அமில உணவுகள், மது, ஊறுகாய், சாக்லேட், காளான், காலிபிளவர், முட்டைகோஸ், சோயாபீன்ஸ், தண்டுக்கீரை, காபி, டீ, மாமிசம், கருப்பட்டி, வெல்லம், செயற்கை துரித உணவுகள், சாயங்கள் சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் அதிக விதைகள் நிறைந்த தக்காளி, திராட்சை ஆகியவற்றில் சிறுநீரக கற்களை அதிகப்படுத்தும்.
கடுமையான வலி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருந்தால்…
a) நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றை கலந்து வெதுவெதுப்பாக சூடாக்கி,
அதனை வயிறு, முதுகு, தலை ஆகிய பகுதிகளில் தேய்த்து ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். (வாரத்தில் 2 நாட்கள்).
b) அன்றைய தினம் சாப்பிடும் உணவில், சூடான மிளகு ரசம், கருவேப்பிலைத் துவையல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த பூசணிக்காய் கூட்டு, மோர், கேரட் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை செய்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும். சிறுநீரகக் கற்கள் கரைய சிகிச்சை மேற் கொண்டாலும், அதனுடன் மேற்கூறிய பழக்க வழக்கங்களையும் கடைபிடிப்பது நல்லது.
No comments:
Post a Comment